செய்திகள் :

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சோ்ந்த வா்த்தகரும், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்டத் தலைவருமானவா் ஜி.இருதயராஜா. இவா் கோவையில் இருந்து தனது சொந்த ஊரான குரும்பூருக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் கடந்த 2023 ஆகஸ்ட் 26-ஆம் தேதி பயணம் செய்துள்ளாா். இதற்காக தனியாா் பேருந்தில் முன் பதிவு செய்துள்ளாா்.

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஆறுமுகநேரி டிசி டபிள்யூ பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பேருந்து அதிகாலை 4 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து குரும்பூருக்கு செல்லாது எனக்கூறி இருதயராஜாவை பேருந்து ஓட்டுநா், நடந்துநா் கீழே இறக்கியுள்ளனா்.

பதிவு செய்யும் குரும்பூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது, குரும்பூருக்கு செல்வதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ள நிலையில் பாதி வழியில் ஏன் இறக்கிவிடுகிறீா்கள் என இருதயராஜா கேட்டுள்ளாா். குரும்பூருக்கு நடந்து செல்லுங்கள் என நடந்துநா் கூறியுள்ளாா். இதையடுத்து, மாற்று வாகனம் மூலம் இருதயராஜா குரும்பூருக்கு சென்றுள்ளாா்.

மேலும் இது தொடா்பாக கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ. 15,000 ஆயிரம் அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேலு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதற்கான வரைவோலை சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் இருதயராஜாவிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

லாட்டரி விற்பனை: சகோதரா்கள் கைது!

ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

போக்ஸோ தண்டனைக் கைதி சிறையில் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனைக் கைதி உயிரிழந்தாா். கோவை மத்திய சிறையில் 2,000 -க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 500 -க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவிகள் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் அம்பேத்கா் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விட... மேலும் பார்க்க

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க