செய்திகள் :

பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இதையும் படிக்க: விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!

பயப்பட வேண்டிய அவசியமில்லை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த சீசனில் இது எங்களுடைய முதல் போட்டி. எங்களது அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. சில விஷயங்களை சுட்டிக்காட்டி நான் பேச விரும்பவில்லை. ஒரு அணியாக நாங்கள் சில இடங்களில் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஒரு அணியாகவும், தனிநபராகவும் சில இடங்களில் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க:ஐபிஎல் 2025: லக்னௌ அணியில் இணைந்த ஷர்துல் தாக்குர்!

கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதனால், அவர்களுக்கு ஆதரவாகவே நான் பேசப் போகிறேன். அவர்களது சிறப்பான ஆட்டத்தை முயற்சி செய்தனர். அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இதுபோன்ற பல சூழல்களில் அணிக்காக அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களது முயற்சி சரியாக வேலை செய்தால், அது உண்மையில் சிறப்பாக இருக்கும். இது மிகவும் நீண்ட தொடர். ஒரு அணியாக ஒவ்வொரு தனிநபருக்கும் எங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.

மார்ச் 26 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

ஐபிஎல்: ஹைதராபாத்தில் லக்னௌ சரவெடி! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் ... மேலும் பார்க்க

ஷர்துல் தாக்குர் 100*..! ஐபிஎல்லில் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!

ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கான போட்டிகள் மார்ச் 28, ஏப்ரல் 5, 11, 25, 3... மேலும் பார்க்க

ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ந... மேலும் பார்க்க

பந்துவீச்சை தேர்வு செய்த லக்னௌ; அதிக ரன்கள் குவிக்கும் நம்பிக்கையில் சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ... மேலும் பார்க்க

என்னுடைய வேலையை செய்தேன்; அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் பேச்சு!

தொடக்க ஆட்டக்காரராக என்னுடைய வேலையை செய்தேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 18-வது சீசனில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரை... மேலும் பார்க்க