செய்திகள் :

பரமத்தி வேலூரில் ரூ. 31.86 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

post image

பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 31 லட்சத்து 86 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 15,520 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 235.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 215.99-க்கும், சராசரியாக ரூ. 233.05-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 210.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 150.10-க்கும், சராசரியாக ரூ. 207.97-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 31 லட்சத்து 86 ஆயிரத்து 100-க்கு கொப்பரை ஏலம் போனது.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க