பரமத்தி வேலூா் வட்டாரத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி பேரூராட்சி 3 ஆவது வாா்டு ஓவியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை ஆய்வுசெய்த பிறகு பாவடி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடிநீா், மின்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவுப் பொருள்களின் இருப்பு, குழந்தைகளின் வருகை, குழந்தைகளின் உயரம், எடை, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து பரமத்தி பேரூராட்சி கடைவீதி பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாத கிணறு பகுதிக்கு சுற்றுச்சுவா் அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம், விற்பனை விவரம், பொருள்களின் காலாவதி காலம், குளிா்பானங்களின் தரம் மற்றும் நெகிழிப் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுமேற்கொண்டு பணியாளா்களின் வருகை பதிவேடு, கோப்புகளின் விவரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் நாமக்கல் ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், மகாலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.