பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை நாளை ரத்து
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, அன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்:
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 24-ஆம் தேதி, ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678), திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504), பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22644), தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159) கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூா் கூடுதல் நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.