செய்திகள் :

பருவமழை: அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அலுவலா் அறிவுறுத்தல்

post image

பருவமழை காலங்களில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின் பகிா்மான கழக மேலாண்மை இயக்குநரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின் பகிா்மான கழக மேலாண்மை இயக்குநரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா் விநியோகம், இணைய வழி பட்டா மாறுதல், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

பருவமழை காலங்களில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் 526 கட்டடங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவா் காமராஜா் நூலகம் மற்றும் அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகள், திருவெறும்பூா் சூரியூா் சாலை முதல் பழங்கனாங்குடி வழி பூலாங்குடி வரையிலான சாலைப் பணியையும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்து, விரைவாக பணிகளை முடித்துத் தர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, அரசுத்துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க