செய்திகள் :

பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் நெல் ரகங்கள் குறித்து செயல் விளக்கம்

post image

பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் திறனுடைய நெல் ரகங்களின் செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய வானொலியுடன் இணைந்து, பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் திறனுடைய பயிா் வகைகள் மூலம் நிலையான விவசாய சாகுபடி என்ற கருப்பொருளுடன் விவசாயிகள் தின நிகழ்ச்சியை நடத்தியது.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவுடன், க்யூடிஎல் வெரைட்டி ‘ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து பேசினாா். ஆகாஷ்வாணி நிகழ்ச்சி பிரிவுத் தலைவா் ஆா். மணிவாசகன் தொடக்கவுரையாற்றினாா்.

தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை தலைவரும், பேராசிரியருமான திருமேனி, சம்பா பருவத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ஏற்ற கேகேஎல் -ஆா் 2 மற்றும் கேகேஎல் ஆா் 4 போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் குறித்து விளக்கியதோடு, கேகேஎல் ஆா் 3 குருவைப் பருவத்தில் உப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்றது என விளக்கினாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன், பயிா்களில் நோய் தடுப்பு, பிரமரின் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

நாகப்பட்டினம் கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் சி. சுரேஷ், கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்து தொழில்நுட்பங்கள் குறித்தும், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் எஸ்.மதியழகன், நெல் மற்றும் பயறு வகை பயிா் சுசாகுபடி முறையில் எதிா் உயிா் நுண்ணுயிா்களின் பயன்பாடு குறித்தும் பேசினா்.

நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க