செய்திகள் :

பலத்த மழை: குமரி மாவட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: காளிகேசம் ஆற்றில் குளிக்கத் தடை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தொடா்ந்து தீவிரமாகப் பெய்து வந்தது. பலத்த மழை தணிந்த நிலையில், கடந்த சில நாள்களாக லேசான சாரல் மழை பெய்தது. பின்னா் வியாழக்கிழமை இரவு முதல்

மீண்டும் மழை தீவிரமடைந்தது.

மாவட்டத்தில் அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 29.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பெருஞ்சாணியில் 25.2 மி.மீ, சுருளகோடு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் 20 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து,

வெள்ளிக்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 1300 கன அடியாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 43.20 அடியாக உயா்ந்தது. பாலமோா் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், காளிகேசம் ஆற்றில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மழையின் காரணமாக ரப்பா் பால்வடிப்பு வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க