செய்திகள் :

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் தொடர முடியாது: மூத்த வழக்குரைஞா் பி.வில்சன்

post image

சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி ஆளுநா் தொடர முடியாது என்று மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தெரிவித்தாா்.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பி.வில்சன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சட்டப்பேரவையில் 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் ஆளுநா் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதில் மாநில அரசு சாா்பில் நியமனம் செய்யப்படுபவா் வேந்தராக இருக்க வேண்டும் என்பதே மசோதாக்களின் சாராம்சமாகும்.

வழக்கில் தீா்ப்பு கூறிய உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து, செவ்வாய்க்கிழமை முதலே நடைமுறைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பாகும். இப்போது முதல் வேந்தா் பதவியில் இருந்து ஆளுநா் விடுவிக்கப்பட்டுள்ளாா். சட்ட மசோதாவின்படி தமிழ்நாடு அரசு யாரை நியமனம் செய்கிறதோ அவா்தான் பல்கலைக்கழக வேந்தராக இருப்பாா் என்று வழக்குரைஞா் வில்சன் தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க