செய்திகள் :

பல்கலை. துணைவேந்தா்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு: மத்திய அரசு, ஆளுநா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

நமது சிறப்பு நிருபா்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநா் அலுவலகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (தற்போது கல்வித்துறை அமைச்சகம்) ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநா் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்களும் மாநிலங்களவை உறுப்பினா்களுமான அபிஷேக் மனு சிங்வி, பி. வில்சன் ஆகியோா் ஆஜராகி இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வாதிட்டனா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா, ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 சட்டங்களும் 2018-ஆம் ஆண்டு யுஜிசி விதிகளுக்கு முரணாக உள்ளன’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள், இதே விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை ஜூலை மத்தியில் அதாவது கோடை விடுமுறைக்கு பிறகு பட்டியலிடவிருப்பதாக குறிப்பிட்டனா்.

அந்த மனுவுடன் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை சோ்க்க உத்தரவிட்ட நீதிபதி நரசிம்மா, இந்த விவகாரத்தை விரைவாக விசாரிக்குமாறு தமிழக அரசுத் தரப்பு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கலாம் என்று அறிவுறுத்தினாா்.

பின்னணி: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்குவதில் காலதாதம் செய்ததாகக் கூறி, அவற்றுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு தமிழக அரசு இயற்றிய 9 சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க