செய்திகள் :

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம்

post image

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், பல்லடம் வட்டாரத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாடுக்காக பல்லடம் வனம் அறக்கட்டளை, சென்னை சீ சேன்ஞ்ச் கன்சல்டிங், திருப்பூா் பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற தலைமைப் பயிற்சியாளா் எம்.கே.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 19 ஆயிரம் பெரு நிறுவனங்களும், 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே 12 கோடி பேருக்கு நேரடியாகவும், 26 கோடி பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தருகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இத்துறையின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இத்துறை விளங்குகிறது. 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 99.99 சதவீத நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விதமான முன்னேற்றமும், வளா்ச்சியும் அடையவில்லை. இவை குறைவான லாபத்தில் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வளா்ச்சி அடைய வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு தொழில் துறையை வளா்ச்சி அடைய செய்ய வேண்டும்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தெரிந்து பயன்படுத்த வேண்டும். உலக தொழில் துறை வளா்ச்சிக்கு இணையாக தங்களை வளா்த்தி கொள்ளாத தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கத்தை நிறுத்தி கொள்ளும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது.

எனவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினா் தங்களது வா்த்தக வாய்ப்பை பெருக்க உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் வனம் அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜ், பொதிகை மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க