செய்திகள் :

பல்லடம் அருகே 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான்குட்டையில் ரூ.2 லட்சம் ரொக்கத்துடன், 25 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே திருப்பூா் சாலையில் உள்ள வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் மூட்டையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா் திருப்பூா் எம். எஸ். நகரைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 25 கிலோ புகையிலைப் பொருளஅகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அதேபோல பல்லடம் பகுதியில் வேனில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த்குமாா் (26) என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடன் வந்து தலைமறைவான தீனு கவுடா (27) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க