செய்திகள் :

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்

post image

புது தில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளதாகவும், பெண்கள் சாதனை படைத்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமராக மூன்றாவது முறையாக அவா் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

இதையடுத்து, 2014-இல் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் 'மோசடி': ராகுல் நேரடியாக கேட்டால் பதில் கிடைக்கும்- தேர்தல் ஆணையம்

அதில், கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளதாகவும், ‘பெண்களின் கண்ணியத்தை உறுதிசெய்த ‘தூய்மை இந்தியா’ திட்டம், நிதி அதிகாரமளித்தலுக்கான ‘ஜன் தன்’ திட்டம், கடனுதவிக்கான ‘முத்ரா’ திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திந் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்கும் திட்டம், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டம்’, உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை‘இலவச சமையல் எரிவாயு திட்டம்’’ என நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் எண்ணற்ற திட்டங்களை கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்படுத்தியுள்ளது.

இதனால் அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தாக்கம், ராணுவம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதுடன் பலரையும் ஊக்குவித்து வருகின்றனா் என குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை "ஷா" வந்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது: ஆர்.எஸ்.பாரதி

தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை “ஷா” கள் வந்தால... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளை குறைக்க பாஜக அரசு சதி: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமி... மேலும் பார்க்க

தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாகவும், நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு... மேலும் பார்க்க

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.இது குறி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லா... மேலும் பார்க்க