பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் கோயில் திருவிழாவிற்குச்சென்ற போது அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுந்தரம் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டூ வீசிச் சென்றனா்.
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அடைச்சாணியைச் சோ்ந்த மாரியப்பன்(26), பள்ளக்காலை சோ்ந்த கிருஷ்ணன் மகன் பொன்ராஜ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
