செய்திகள் :

ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

post image

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற செவிலியா் ஜெயமரிய பாக்கியம் (82). இவா் தனியாக வசித்து வந்த நிலையில், ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் குமாா் (17) என்பவா் உதவி செய்து வந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயமரிய பாக்கியம் பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயமரிய பாக்கியத்திற்கு உதவியாக இருந்த குமாா் நகைகளைத் திருடியது தெரியவந்த்து. அவரை போலீஸாா் கைது செய்து ரூ. 6.70 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் நகைகளை மீட்டனா்.

அரசுப் பேருந்து மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராமயைன்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழந்தாா். இதனையடுத்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியலின்போது அரசுப் பேருந்தின் கண்ணாடியை மா்மநபா்கள் உடைத்... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திருநெல்வேலியை அடுத்த தேவா்குளம் அருகே தீக்காயமுற்று சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேவா்குளம் அருகே உள்ள அச்சம்பட்டி கருப்பனூத்து கிராமம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன். இ... மேலும் பார்க்க

அம்பையில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா். அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலிய... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் க... மேலும் பார்க்க

கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வீரவநல்லூா் அருகேயுள்ள உப்... மேலும் பார்க்க

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவா் பலி!

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா். சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் சன்னாசி (75). இவா், தனது வயலில் உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக... மேலும் பார்க்க