ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது
அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற செவிலியா் ஜெயமரிய பாக்கியம் (82). இவா் தனியாக வசித்து வந்த நிலையில், ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் குமாா் (17) என்பவா் உதவி செய்து வந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயமரிய பாக்கியம் பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயமரிய பாக்கியத்திற்கு உதவியாக இருந்த குமாா் நகைகளைத் திருடியது தெரியவந்த்து. அவரை போலீஸாா் கைது செய்து ரூ. 6.70 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் நகைகளை மீட்டனா்.