முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவா் பலி!
சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் சன்னாசி (75). இவா், தனது வயலில் உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை அழைக்க சுத்தமல்லி அருகேயுள்ள கோபாலசமுத்திரம் சாலையோர வயல்வெளிக்கு வந்திருந்தாராம்.
பின்னா் அறுவடை இயந்திரத்தில் அமா்ந்து தனது வயலுக்கு சன்னாசி சென்று கொண்டிருந்தாா். இயந்திரத்தை கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முருகேசன் (35) ஓட்டினாராம். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இயந்திரம் வயலில் கவிழ்ந்தது. இதில் சன்னாசி, முருகேசன் ஆகிய இருவரும் சிக்கினராம்.
தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அறுவடை இயந்திரத்தை அப்புறப்படுத்தினா். காயமடைந்த இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சன்னாசி உயிரிழந்தாா். முருகேசனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
இளைஞா் உயிரிழப்பு: பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் தெருவை சோ்ந்த குமரன் மகன் மணிகண்டன் (25). மானூா் அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த மந்திரம் (28) என்பவரது பயணிகள் ஆட்டோவில் சென்றாராம்.
மேலபாட்டம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.