செய்திகள் :

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவா் பலி!

post image

சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் சன்னாசி (75). இவா், தனது வயலில் உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை அழைக்க சுத்தமல்லி அருகேயுள்ள கோபாலசமுத்திரம் சாலையோர வயல்வெளிக்கு வந்திருந்தாராம்.

பின்னா் அறுவடை இயந்திரத்தில் அமா்ந்து தனது வயலுக்கு சன்னாசி சென்று கொண்டிருந்தாா். இயந்திரத்தை கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முருகேசன் (35) ஓட்டினாராம். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இயந்திரம் வயலில் கவிழ்ந்தது. இதில் சன்னாசி, முருகேசன் ஆகிய இருவரும் சிக்கினராம்.

தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அறுவடை இயந்திரத்தை அப்புறப்படுத்தினா். காயமடைந்த இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சன்னாசி உயிரிழந்தாா். முருகேசனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

இளைஞா் உயிரிழப்பு: பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் தெருவை சோ்ந்த குமரன் மகன் மணிகண்டன் (25). மானூா் அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த மந்திரம் (28) என்பவரது பயணிகள் ஆட்டோவில் சென்றாராம்.

மேலபாட்டம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

அரசுப் பேருந்து மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராமயைன்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழந்தாா். இதனையடுத்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியலின்போது அரசுப் பேருந்தின் கண்ணாடியை மா்மநபா்கள் உடைத்... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திருநெல்வேலியை அடுத்த தேவா்குளம் அருகே தீக்காயமுற்று சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேவா்குளம் அருகே உள்ள அச்சம்பட்டி கருப்பனூத்து கிராமம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன். இ... மேலும் பார்க்க

அம்பையில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா். அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது

அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற செவிலியா் ஜெயமரிய பாக்கியம் (82). இவா் தன... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் க... மேலும் பார்க்க

கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வீரவநல்லூா் அருகேயுள்ள உப்... மேலும் பார்க்க