செய்திகள் :

வாகனங்களில் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் எடுத்துச் செல்ல இடைக்கடவுச் சீட்டு அவசியம்!

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்ல ஆன்லைனில் இடைக்கடவுச் சீட்டு பெறும் நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்புக் கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, செயற்கை மணல் (எம்.சாண்ட்) கொண்டு செல்ல இதுவரை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்திலேயே இடைக்கடவுச் சீட்டு (பழ்ஹய்ள்ண்ற் டஹள்ள்) வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, ஜூன் 9 முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷா் மற்றும் இருப்புக் கிடங்குகளில் இருந்து ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் (எம்.சாண்ட்) ஆகியவற்றை கொண்டு செல்ல இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்கப்படும் நடைச் சீட்டுகளின் அடிப்படையில் இடைக்கடவுச் சீட்டு (பழ்ஹய்ள்ண்ற் டஹள்ள்) இணைய தளம் வாயிலாக மட்டுமே வழங்கப்படும்.

இனிவரும் காலங்களில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமையும். எனவே, அனைவரும் இணைய வழி இடைக் கடவுச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீரமைப்பு... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க