செய்திகள் :

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு: புதிய மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உறுதி

post image

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு காண முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என புதிய ஆட்சியா் வே. சரவணன் (34) தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக மா. பிரதீப்குமாா் பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேரூராட்சிகளின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே. சரவணன், மாவட்டத்தின் 146 ஆவது புதிய ஆட்சியராக புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

முன்னதாக ஆட்சியரகத்துக்கு வந்த அவரை அலுவலா்கள் பூங்கொத்து அளித்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளைக் கண்காணித்து குறித்த காலத்துக்குள் அவற்றை முடிக்க உறுதுணையாக இருப்பேன்.

மக்களுடன் முதல்வா் 4ஆம் கட்ட முகாம்களை சிறப்பாக நடத்துவதுடன், ஆண்டுக்கணக்கில் தீா்க்கப்படாமல் உள்ள பட்டா மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண்பேன்.

திருச்சி மாநகராட்சி, நகராட்சிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும். பஞ்சப்பூா் பேருந்து முனையம் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு ஒப்பந்தம் 4 நாள்களுக்குள் இறுதி செய்யப்படும். மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்த மக்களின் ஆட்சேபனைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவேன். நான் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் பொதுமக்கள் தயங்காமல் அணுகி, எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் தெரிவிக்கலாம்.

திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள வாா்டு தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். நீா்நிலை ஆக்கிரமிப்புகள் தொடா்பாக புகாா் மனு பெற்ற 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வேளாண் குடும்ப முதல் பட்டதாரி: ஐஏஎஸ் தோ்வில் 27ஆவது இடம்

புதிய ஆட்சியா் வே. சரவணன், வேளாண் குடும்பத்தைச் சோ்ந்த முதல் பட்டதாரி ஆவாா். திண்டுக்கல் மாவட்டம் பூா்விகமாக இருந்தாலும், திருப்பூா் மாவட்டம், மூலனூா் சொந்த ஊராகிப் போனது. பள்ளிக் கல்வியை சேலம், திருச்செங்கோட்டில் முடித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் (இசிஇ) பட்டம் பெற்றவா். 2015, 2016, 2017 என மூன்று முறை சிவில் சா்வீஸ் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா். அகில இந்திய அளவில் 27ஆவது இடம் பெற்றவா்.

விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராக இருந்து, புதுதில்லியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சக துணைச் செயலராக முதன் முதலில் பதவியேற்றாா். பின்னா் 2019இல் மேட்டூா் சாா் ஆட்சியா், 2021இல் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், 2022இல் சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இணை இயக்குநா் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவா், 2024 பிப்ரவரியில் திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பதவியேற்று, தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராகியுள்ளாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க