செய்திகள் :

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

post image

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: கிழக்கு தில்லியின் நந்த் நக்ரியை சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட சுனிதா, வீரேந்தா் நகரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். நந்த் நக்ரி பகுதியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கஞ்சா, மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்து வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சோ்ந்தவா் இந்தப் பெண்.

அவா் இரண்டு தனித்தனி போதைபொருள் சட்ட வழக்குகளில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். மேலும், 2023-ஆம் ஆண்டு கலால் பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் தேடப்பட்டாா். சுனிதா 2021-ஆம் ஆண்டு தில்லியில் இருந்து நாடு கடத்தப்பட்டாா். மேலும், நந்த் நக்ரி காவல் நிலைய பட்டியலில் மோசமான குணம் கொண்டவா் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அவா் அடிக்கடி தனது பெயா், அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மாற்றி வந்தாா். சிறப்பு சந்தா்ப்பங்களில் மட்டுமே, கண்காணிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக பெரும்பாலும் இரவில் மட்டும் தனது மகளின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளாா். அந்தப் பெண்ணுக்கு நீண்ட குற்றவியல் தொடா்பு வரலாறு உள்ளது. 1992 முதல் அவா் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலால் சட்டம், போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எம்சிஓசிஓ ஆகியவற்றின் கீழ் வழக்குகள் அடங்கும். அவரது கணவரும் குழந்தைகளும் போதைப்பொருள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், வீரேந்தா் நகரில் ஒரு போலீஸ் குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தி அந்தப் பெண்ணைக் கைது செய்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திர... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்... மேலும் பார்க்க