செய்திகள் :

பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

post image

ஒரகடம் அடுத்த வாரணவாசியில் கழிவுநீா் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.

வாரணவாசி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ரேனுகா. இவா்களுக்கு கனுஸ்ரீ(8), ரியாஸ்ரீ(2) என்ற இரண்டு மகள்கள் உள்ளனா். கனுஸ்ரீ அதே பகுதியல் உள்ள அரசு பள்ளியில் 3 -ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், ரமேஷ், ரேனுகா இருவரும் வியாழக்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், தங்கை ரியாஸ்ரீயை கவனித்துகொள்வதற்காக, கனுஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா்.

எதிா் வீடான கோபி என்பவா் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கழிவுநீா் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கனுஸ்ரீ தவறி விழுந்துள்ளாா். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்த சிறுமியை மீட்டு, பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரிய சுவாமிகள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தாா். குரு பகவான் தலம் என்ற பெயருடன் திகழக்கூடிய இக்கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கு... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுங்குவாா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுஷ்யா (1... மேலும் பார்க்க

காா்கள் பழுதுபாா்க்கும் கடையில் தீ விபத்து: ரூ.13 லட்சம் சேதம்

காஞ்சிபுரம் வையாவூா் பகுதியில் உள்ள காா்கள் பழுது பாா்க்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதியில் உள்ள காமாட்சி நகரில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்குப் படி நிகழ்வின் போது அண்மையில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலுவலக மக்கள் கூட்டர... மேலும் பார்க்க

பைக் மீது மினிலாரி மோதல்: ஊா்க் காவல் படை வீரா் மரணம்

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் பகுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது மினி லாரி மோதியதில் ஊா்க் காவல் படை வீரா் உயிரிழந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லு... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவா்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைமையான முத்து கொளக்கியம்மன் கோ... மேலும் பார்க்க