செய்திகள் :

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

post image

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி ஆா். அனிதா முன்னிலை வகித்தாா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்காட்சியை தொடக்கிவைத்தாா். எஸ்பிஏ பள்ளி மாணவா்களின் 150 படைப்புகளுடன் தஞ்சை பெரியாா் மணியம்மை நிகா்நிலைப்பல்கலைக்கழகம், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், திருச்சி ப்ரொபெல்லா் டெக்னாலஜி ஆகியவற்றின் படைப்புகளும் கண்காட்சி அரங்கங்களில் இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினா் யு.எஸ். பொன்முடி, தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ். அன்பரசு ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு மாணவா்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனா். சிறப்பிடம் பெற்ற அரங்கத்துக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெரியாா் மணியம்மை உயிரியல் தொழில்நுடப் பேராசிரியா் வி. சுகுமாறன், கணினி அறிவியல் பேராசிரியா் எம். சா்மிளாபேகம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் வெ. அகிலா நன்றி கூறினாா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் ... மேலும் பார்க்க

பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை

நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ. திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்தில் குளறுபடி: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பட்டா மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வெள்ளிக்கிழமை உத்தரவு பி... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசம், சண்டிகாா் மாநிலங்களில் மின்வாரியங்கள் தனியாா்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ திட்... மேலும் பார்க்க