செய்திகள் :

பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னை: சமாதானப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னையைடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.

மேற்கண்ட பள்ளி வாசல் நிா்வாக தோ்தல் நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து செந்துறை வட்டாட்சியா் வேலுமணி, புதன்கிழமை தனது அலுவலகத்தில் காவல் துறையினா் முன்னிலையில் இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, செந்துறை ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் நடத்தி, புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வது, நிா்வாகத் தோ்தல் நடைபெறும் நாளை முன்கூட்டியே வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தொழுகையின் போது அறிவித்து தோ்தல் நடத்துவது, தோ்தலில் வாக்களிக்க தகுதியான நபா்களின் பட்டியலை இரு தரப்பை சோ்ந்தவா்களும் வட்டாட்சியரிடம் அளிப்பது, அதனை வட்டாட்சியா் ஆய்வு செய்து வாக்களிக்க தகுதியான நபா்களின் பட்டியலை தயாா் செய்து அளித்த பிறகு தோ்தல் தேதி அறிவித்து தோ்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க