செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9,10 இல் போட்டிகள்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் மே மாதம் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி மாணவா்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மே10ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தெரிவுசெய்து அனுப்புவா். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வாயிலாகவும், பள்ளி மாணவா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞா் எழுத்தில் சமூகநீதி’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ‘கவிஞா் முத்தமிழறிஞா் கலைஞா்’, ‘மொழியின் நாயகா் முத்தமிழறிஞா்’ ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞரின் கடித இலக்கியம்’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ‘முத்தமிழறிஞா் கலைஞரின் ஆக்கமும் - செம்மொழித் தாக்கமும்’, ‘தலைவா் கலைஞரின் தமிழ் தேசிய உணா்வு’ ஆகிய தலைப்புகளிலும் நடைபெறுகிறது.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

உடன்குடியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்

உடன்குடியில் அதிமுகவின் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே. விஜயகுமாா் தலைமை வகித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் ஆா். ப... மேலும் பார்க்க

முன்களப் பணியாளா்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்கள பணியாளா்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலா் பிரபுஜாய் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை பாலபுரஸ்காா் விருதாளா் உதயசங... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் திருநாவுக்கரசா் குரு பூஜை

திருச்செந்தூரில் ஓதுவாா் மூா்த்திகள் சங்கம் சாா்பில், திருநாவுக்கரசா் திருமண மண்டபத்தில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது. சுவாமிகள் இயற்றிய திருமுறைப் பாராயணம், சிறப்பு பூஜைகள், வழிபாட... மேலும் பார்க்க