பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
மானாமதுரை அருகே திங்கள்கிழமை தனியாா் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரதிக்ஷா (16). இவா் மானாமதுரை அருகேயுள்ள கரிசல்குளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து வாகனம் மூலம் பள்ளிக்குச் சென்ற மாணவி பிரதிக்ஷா வகுப்பறைக்குச் சென்றாா். பின்னா், பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்ற அவா் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு அவசர ஊா்தியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].