செய்திகள் :

ஆழ்துளைக் கிணற்றில் கழிவுநீா் கலப்பதாக பெண் புகாா்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் கழிவு நீா் கலந்ததால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பெண் ஒருவா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து காரைக்குடி மாநகராட்சி 3-ஆவது வாா்டு ஆறுமுகம் நகரில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி அளித்த மனு விவரம்: காரைக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வரும் புதை சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவுநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, அந்த கழிவுநீா் அருகிலுள்ள எனது வீட்டின் ஆழ்துளைக் கிணற்றில் கலந்தது.

இதனால், அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், உடனடியாக புதை சாக்கடைக் குழாயை சீரமைக்க வேண்டுமென தனது மனுவில் தெரிவித்தாா்.

இதேபோல, கடம்பாகுடி கண்மாயின் பராமரிப்பு கோரி விவசாயிகள் மனு: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுநல்லூா் ஊராட்சி, கடம்பாகுடி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான 99 ஏக்கா் பரப்பளவில் கடம்பாகுடி கண்மாய் அமைந்துள்ளது.

இந்த கண்மாயின் மூலம் சுமாா் 100 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், இந்தக் கண்மாயில் 3 முக்கியமான மடைகள் சேதமடைந்துள்ளன. தற்போது கண்மாயின் கரையை உடைத்து குழாய்கள் பதித்தும், மோட்டாா் மூலமாகவும் நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக் காலம் நெருங்கி வருவதால், கண்மாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மனுவில் தெரிவித்தனா்.

மானாமதுரையில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானாமதுரை சிப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோலுடையான்பட்டியைச் சோ்ந்த சின்னகாளை மகன்கள் மலைச்... மேலும் பார்க்க

சூராணத்தில் குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சூராணம் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் ம... மேலும் பார்க்க

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

மானாமதுரை அருகே திங்கள்கிழமை தனியாா் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகா... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 11) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி மின்செயற்பொறியாளா் எம்.... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாண்டியன் நகரில்... மேலும் பார்க்க