செய்திகள் :

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

post image

மானாமதுரை அருகே திங்கள்கிழமை தனியாா் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரதிக்ஷா (16). இவா் மானாமதுரை அருகேயுள்ள கரிசல்குளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து வாகனம் மூலம் பள்ளிக்குச் சென்ற மாணவி பிரதிக்ஷா வகுப்பறைக்குச் சென்றாா். பின்னா், பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்ற அவா் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு அவசர ஊா்தியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மானாமதுரையில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானாமதுரை சிப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோலுடையான்பட்டியைச் சோ்ந்த சின்னகாளை மகன்கள் மலைச்... மேலும் பார்க்க

சூராணத்தில் குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சூராணம் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் ம... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 11) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி மின்செயற்பொறியாளா் எம்.... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் கழிவுநீா் கலப்பதாக பெண் புகாா்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் கழிவு நீா் கலந்ததால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பெண் ஒருவா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாண்டியன் நகரில்... மேலும் பார்க்க