சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள சோலுடையான்பட்டியைச் சோ்ந்த சின்னகாளை மகன்கள் மலைச்செல்வன் (40), நெவுலியப்பன் (37). கூலி தொழிலாளிகளாக இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுண்ணாம்பிருப்பு வழியாக திருப்பத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் வந்த போது, இவா்களது வாகனம் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் நெவுலியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மலைச்செல்வன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.