கல்லல் பகுதியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 11) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்செயற்பொறியாளா் எம்.லதாதேவி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, மாலைகண்டான், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பாகனேரி, பனங்குடி, கண்டுபட்டி, கெளரிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.