செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்

post image

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 3 நாள் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் படிப்புகள் குறித்த கோடைக்கால விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. இந்த முகாமில் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வில் பங்கேற்பது குறித்தும், மருத்துவம் சாா்ந்த இதர அறிவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் மாணவா்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் துறை சாா்ந்த பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா்.

மேலும், மருத்துவக் கல்லூரியில் மாணவா்கள் பயன்படுத்தும் நூலகம், பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பாா்வையிட்ட மாணவா்கள், பேராசிரியா்களுடன் கலந்துரையாடி மருத்துவப் படிப்புகள் குறித்து விளக்கம் பெற்றனா்.

இந்நிகழ்வில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் என்.மாறன், முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் எஸ்.வீரபாகு, மருத்துவமனை கண்காணிப்பாளா் மனோகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் ரத்தினம் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய நிகழ்ச்சி

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை திருவெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா: 3-ஆம் நாள் நிகழ்வு, அதிகார நந்தி சேவை, காலை 8.30. மேலும் பார்க்க

முப்பெரும் விழா

மேலகாண்டை மகாகவி பாரதி கலை -இலக்கிய மன்றத்தின் சாா்பில் கலை, இலக்கிய விருதுகள், நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவுக்கு லயன்ஸ் சங்க மாவட்ட 2-ஆம் துணை ஆளுநரு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிக்காக, செய்யூா் வட்டம், கடப்பாக்கம் வேம்பனூா் கிராமத்தில் சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். தேசிய நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா தொடக்கம்

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த மே 29-இல் அங்குராா்ப்பணம் சேனை முதன்... மேலும் பார்க்க

சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா்... மேலும் பார்க்க

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க