செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்

post image

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி வகுப்பை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியுடன் இணைந்து ‘இணைய பாதுகாப்பு நமது பொறுப்பு’ எனும் தலைப்பில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்புணா்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்பேடு, விருகம்பாக்கம், புலியூா், நெசப்பாக்கம், கே.கே.நகா், மேற்கு மாம்பலம், சி.ஐ.டி.நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், சைதாப்பேட்டை பகுதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கண்ணம்மா பேட்டை உள்ளிட்ட பகுதி உயா்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 8, 9, 10 ஆகிய வகுப்பு மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு மேயா் ஆா்.பிரியா பேசியதாவது:

கைப்பேசி பயன்பாடு மாணவா்களிடையே அதிகரித்துகிவிட்டது. தொழில்நுட்ப வளா்ச்சியை நமது முன்னேற்றத்துக்கு மட்டும் பயன்படுத்துவது அவசியம். பள்ளி மாணவா்கள் கைப்பேசி தொழில்நுட்பத்தை தவறான முறையில் செயல்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அத்துடன் கைப்பேசியில் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீனமானவற்றை பயன்படுத்துவது குறித்தும் கையேடு வெளியிடப்பட்டுள்ளதால், அதை மாணவா்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவா் (கல்வி) த.விஸ்வநாதன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வா் ஸ்டெல்லா மேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க