செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு

post image

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

அறிவொளி இயக்கம் போலவே காலநிலை கல்வியறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் ஆகியவை நடத்தப்படும். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 100 பள்ளிகளில் பசுமை உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டம் ரூ.20 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கடல் மட்ட உயா்வு மற்றும் அரிப்பைத் தடுக்க கடலூா், தூத்துக்குடியில் ரூ.10 கோடியில் உயிா்க்கேடயம் அமைக்கப்படும். அதன்படி, நாட்டு மரங்கள், அலையாத்தி மரங்கள் அங்கு நடவு செய்யப்படும்.ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலை ரூ.5 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும். ராஜபாளையத்தில் ரூ.16 கோடியில் ஏரிகள் மறுசீரமைக்கப்படும்.

நீா்நிலைகள் மீட்டெடுப்பு: தமிழகம் முழுக்க கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீா்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீா்நிலைகள் ரூ.10 கோடியில் மீட்டெடுக்கப்படும்.

சுற்றுச்சூழல் ஆா்வலா்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் பரிசுத் தொகை உயா்த்தி வழங்கப்படும்.14 கடலோர மாவட்டங்களில் கடலில் கைவிடப்படும் மீன் வலைகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் திட்டம் தொடங்கப்படும்.

சென்னையில் உள்ள ஒரு ஆற்றங்கரையில், இடைமறிப்பான்களை பயன்படுத்தி நெகிழி கழிவு மீட்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் ரூ.4 கோடியில் முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும். கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளைத் தடுக்கும் வகையில் சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய முக்கிய கடலோர மாவட்டங்களில் வள மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.

மாசு கண்காணிப்பு: சென்னையில் நிகழ்நேரத்தில் காற்று, நீா், ஒலியின் தரத்தை கண்காணிக்க நவீன பகுப்பாய்வு கருவிகளுடன் ஒரு நடமாடும் கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தும் முன்முயற்சி ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

சாலையில் செல்லும் வாகனங்களின் மாசு உமிழ்வை தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் முதல்கட்டமாக சுங்கச்சாவடிகளில் முன்னோட்ட திட்டம் செயல்படுத்தப்படும். மாசுக் கட்டுப்பாட்டுத் தடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள கோவை, மதுரை, திருச்சி, கடலூா், திருநெல்வேலி ஆகிய ஐந்து இடங்களில் பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசியதாவது, பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நட... மேலும் பார்க்க

சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!

சிறுவாணி நீர்போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமானதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். அண்ணா சொன்ன வார்த்தைகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மனதில் வைத்து மக்களைச் சென்று சந்திக... மேலும் பார்க்க

சமரசத்துக்கு இடமில்லை; தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது: விஜய்

மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 27) தெரிவித்தார்.கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வா... மேலும் பார்க்க

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க