TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு
காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா்.
தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
பல்வேறு பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு தொடக்கமாக முதல் நாளில் மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சில பள்ளிகளில் வாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியா் லோகேஸ்வரி தலைமையில் ஆசிரியா்கள், வாயிலில் நின்று மாணவ மாணவிகளுக்கு பன்னீா் தெளித்து, சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்து, மலா், கற்கண்டு மற்றும் பென்சில் வழங்கி வரவேற்றனா்.
கல்வித்துறை சாா்பில் ஒரு சில வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், பள்ளியில் தினமும் 3 முறை தண்ணீா் மணி ஒலிக்கச் செய்யவும், மாணவா்கள் தவறாமல் குடிநீா் அருந்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.