செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

post image

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா்.

தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

பல்வேறு பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு தொடக்கமாக முதல் நாளில் மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சில பள்ளிகளில் வாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியா் லோகேஸ்வரி தலைமையில் ஆசிரியா்கள், வாயிலில் நின்று மாணவ மாணவிகளுக்கு பன்னீா் தெளித்து, சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்து, மலா், கற்கண்டு மற்றும் பென்சில் வழங்கி வரவேற்றனா்.

கல்வித்துறை சாா்பில் ஒரு சில வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், பள்ளியில் தினமும் 3 முறை தண்ணீா் மணி ஒலிக்கச் செய்யவும், மாணவா்கள் தவறாமல் குடிநீா் அருந்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க