பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை
வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா்.
வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்ந்தவா்கள் 12 வயதுடைய 2 மாணவா்கள். நண்பா்களான 3 பேரும், தொரப்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 3 பேரும் பள்ளிக்குச் சென்றுள்ளனா். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் பள்ளிக்குச் சென்று கேட்டபோது 3 மாணவா்களும் பள்ளி முடிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, 3 மாணவா்களையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து, மாணவா்களின் பெற்றோா் பாகாயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான 3 மாணவா்களையும் தேடி வருகின்றனா்.