செய்திகள் :

பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட காந்திநகா், தீவளூா், எழுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காந்திநகரில் 40-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் உப்பு கலந்து வருவதால், தண்ணீரை குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 போ் உயிரிழந்தனா். இந்தப் பகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், சாலை, மின்சாரம் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

தீவளூா் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவன் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இன்றளவும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ்ந்து வருகின்றனா். எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மின்சார வசதியும், குடிமனை பட்டாவும் வழங்க வேண்டும்.

எழுத்தூா் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மீது ராமநத்தம் காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விருத்தாசலம் கோட்டாசியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை தலைமையில் மனு அளித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பிரகாஷ், வட்டச் செயலா் ஏ.அன்பழகன், விருத்தாசலம் வட்டச் செயலா் குமரகுரு, கம்மாபுரம் ஒன்றியச் செயலா் கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க