செய்திகள் :

பழனியில் தைப்பூச ஆலோசனைக் கூட்டம்: நகா்மன்றத் துணைத் தலைவா் புகாா்!

post image

பழனி தைப்பூசத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் கூட்டம் நடைபெற்றது குறித்து, தமிழக முதல்வருக்கு நகா்மன்றத் துணைத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலருமான கந்தசாமி புகாா் மனு அனுப்பினாா்.

இதுகுறித்து அவா் கடிதத்தில் தெரிவித்ததாவது: பழனியில் நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்களைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

கடந்த காலங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட மக்களவை, சட்டப்பேரவை, நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்துத் தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். குறிப்பாக, இந்தக் கூட்டம் பழனியில் தான் நடைபெற்று வந்தது.

ஆனால், தற்போது நடைபெற்ற கூட்டமானது, மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், அரசு அலுவலா்களை கொண்ட கூட்டமாக நடைபெற்றது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிற போதும், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகிற போதும், அரசு அலுவலா்களை கொண்டு நடத்தப்பட்ட கூட்டம் என்பது எந்த வகையிலும் பொருத்தம் இல்லை.

இது மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது போல, இருக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளை அழைத்து, கூட்டம் நடத்துவது மூலம், பக்தா்களின் பிரச்னைகள், பழனி நகரத்தில் என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும், பக்தா்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூற இயலும் .

எனவே, உடனடியாக மக்கள் பிரதிநிதிநிதிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்கலை. மானியக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்... மேலும் பார்க்க

ஆலமரத்துப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அம்மையநாயக்கனூரில் சமத்துவ பொங்கல் விழா

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு அந்தப் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியா... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. திண்டுக்கல் பூச்சந்தைக்கு ஏ. வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவராம்பட்டி, மைலாப்பூா், மாரம்... மேலும் பார்க்க