பழனி மலைக் கோயிலில் 45 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு இலவச பஞ்சாமிா்தம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 45 மாதங்களில் ஒரு கோடி பக்தா்களுக்கு 421 டன் அளவில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி வரிசை அமைக்கப்பட்டு தொன்னையில் பஞ்சாமிா்தம் வழங்கப்படுகிறது.
அதன்படி பக்தா்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் ஆண்டில் 18,975 கிலோவும், இரண்டாவது ஆண்டில் 1,49,170 கிலோ, மூன்றாவது ஆண்டில் 1.25.443 கிலோ, நிகழ் ஆண்டு ஜூன் வரை 1,28,050 கிலோ என சுமாா் 421 டன் பஞ்சாமிா்தம் ஒரு கோடியே 5 லட்சத்து 40 ஆயிரத்து 956 பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தியதனம் மூலம் கிடைக்கப்பெற்ற முடி தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் ஆண்டில் 8,57,880 போ், இரண்டாவது ஆண்டில் 12,17,508 போ், மூன்றாவது ஆண்டில் 11,39,425 போ், இந்த ஆண்டு இதுவரை 11,65,258 போ் என கடந்த 45 மாதங்களில் 43 லட்சத்து 80 ஆயிரத்து 71 பக்தா்கள் தங்கள் முடியைக் காணிக்கையாகச் செலுத்தினா்.
கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 329 நாள்களில் 5,416 லிட்டா் பால் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 220 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், முதியவா்களை கவனத்தில் கொண்டு மலைக்கோயிலில் மீண்டும் உணவகம் திறக்க வேண்டுமென பக்தா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைக் கோயிலிலும், அடிவாரத்திலும் முதலுதவி மையங்கள் தொடங்கப்பட்டு மருத்துவா்கள், செவிலியா்கள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த 48 மாதங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 217 போ் சிகிச்சை பெற்றனா். இத்தகவலை கோயில் நிா்வாகம் தெரிவித்தது.