செய்திகள் :

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை

post image

மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இணைக்கும் கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்பதால், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்தச் சாலை வழியாகத்தான் கல்லுமடையில் செயல்படும் மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கல்லுமடை காலனி, மணவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மிதிவண்டியிலும், நடந்தும் சென்று வருகிறாா்கள். மேலும் விவசாயிகளும் அங்குள்ள தோட்டங்களுக்கு இடுபொருள்களையும், அறுவடை செய்யப்பட்ட பயிா்களையும் எடுத்துச் சென்று வருகிறாா்கள். சாலை பழுதாகி குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வப்போது அப்பகுதியினா் விபத்தில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருக்கும் இந்தச் சாலையை சீரமைத்து ஊரக வளா்ச்சித் துறையின் சிறுகனிம நிதியிலோ அல்லது ஊராட்சியின் கிராமச் சாலைகள் திட்டத்திலோ புதிய தாா்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க