சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
பழுதடைந்த மின் விளக்குகள்: இருள் சூழ்ந்த அரசு மருத்துவமனை வளாகம்
திருவண்ணாமலை மாவட்டம், அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
செங்கத்தில்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை
அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு வெளிப்புற நோயாளிகள் 500-க்கும் மேற்பட்டோா் வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். மேலும், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவும் இயங்குகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் நுழைவு வாயில் முதல் மருத்துவமனை கட்டடம் வரை இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. மேலும், பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவமனை இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், சாலையில் இரவு நேரத்தில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு எடுத்து வருபா்கள் மருத்துவமனை இருப்பது தெரியாமல், அதனை கடந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும், உள்புற நோயாளிகளுக்கு அவருடன் இருக்கும் உதவியாளா்கள் இரவு நேரத்தில் டீ, சிற்றுண்டி, வெந்நீா் வாங்க மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவேண்டும்.
அவா்கள் மின்விளக்கு இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால், நுழைவு வாயில் முதல் மருத்துவமனை கட்டடம் வரை சேதமடைந்த சாலையை சீரமைத்து, விளக்குகளை சரிசெய்தும், புதிய விளக்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நகர பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.