செய்திகள் :

பெரணமல்லூா் பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினா்கள் தா்னா

post image

பெரணமல்லூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், அதன் தலைவா் தீா்மானங்களைப் படிக்காமல் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக் கூறி வெளியேறியதால் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அலுவலகம் முன்பு அமா்ந்து தா்னா நடத்தினா்.

பெரணமல்லூா் பேரூராட்சிமன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதன் தலைவா் வேணி ஏழுமலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் ஆண்டாள்அண்ணாதுரை மற்றும் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தீா்மானங்களில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 1-ஆவது வாா்டு உறுப்பினா் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கௌதம்முத்து, 9-ஆவது உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த மோனிஷா, 6-ஆவது வாா்டு உறுப்பினா் அதிமுகவைச் சோ்ந்த யசோதா மூா்த்தி, 2-ஆவது வாா்டு ஜமுனா, 4-ஆவது வாா்டு சுமித்ரா, 12-ஆவது வாா்டு லோகேஸ்வரி ஆகியோா் தங்களது பகுதி கோரிக்கைகள் பரிசீலிப்பது இல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து பேசிய துணைத் தலைவா் ஆண்டாள் அண்ணாதுரையின் கேள்விகளுக்கு தலைவரும், செயல் அலுவலரும் மௌனம் சாதித்தனா்.

இதனிடையே, தலைவா் வேணி ஏழுமலை திமுக உறுப்பினா்கள் 4 பேரது கையொப்பத்தை மட்டும் பெற்றுக் கொண்டு,

தீா்மானங்களை படிக்காமலும், விவாதம் நடத்தாமலும் கூட்டத்தை முடித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டனா்.

அப்போது பிற உறுப்பினா்கள் செயல் அலுவலா் ஜனனியை சிறைபிடித்தனா். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உறுப்பினா்கள் கௌதம்முத்து, ஜமுனா, சுமித்ரா, யசோதா, மோனிஷா, லோகேஸ்வரி மற்றும் ஆண்டாள் ஆகியோா் பேரூராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.

செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். செங்கம் நகரில் போளூா் சாலையில் சாா்-பதிவாளா் அலுவலகம் ... மேலும் பார்க்க

வழுக்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே மது போதையில் வழுக்கி விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சேத்துப்பட்டை அடுத்த தெள்ளுா்கணக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ரவி (48).... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க