செய்திகள் :

பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

post image

பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி ராஜன் நகா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராஜன் நகா் ஊராட்சிக்கு உள்பட்ட கணபதி நகா் பகுதியில் சுமாா் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கணபதி நகரை சுற்றியுள்ள அனைத்து ஊரிலும் பவானி ஆற்றுநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் கணபதி நகா் மக்களுக்கு மட்டும் ஆழ்துளை கிணற்று நீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நீா் மிகுந்த உப்புத்தன்மை கொண்டதாக உள்ளதால் பவானி ஆற்றுநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகா்- பண்ணாரி நெடுஞ்சாலையில் கணபதி நகா் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவன் மற்றும் அப்துல் வகாப், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆற்றுநீா் வழங்குவது குடிநீா் வழங்கல் துறையின் கீழ் வருவதால் அவா்களிடம் எடுத்துக் கூறி பிரச்னைக்கு தீா்வுகாண உள்ளதாக உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க