செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் அந்தந்த மாநில முதல்வா்கள் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள்ஆகியோரும் கண்ணீா் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு, அடா்ந்த பைன் மரங்களால் சூழ்ந்த பரந்த புல்வெளி பரப்பைக் கொண்ட எழில்மிகு சுற்றுலாத் தலமாகும்.

கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாள்களாக நாடெங்கும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியைப் பாா்வையிட்டு வந்தனா்.

அந்தவகையில், பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் உடல்கள் ஸ்ரீநகருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னா், அங்கிருந்து விமானம் மூலம் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்தவா்கள் பெரும்பாலானோரின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஒடிஸா: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஒடிஸாவைச் சோ்ந்த பிரசாந்தின் உடல், பாலசோா் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊா்வலத்தில் மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ, பாலசோா் எம்.பி. பிரதாப் சந்திரா சாரங்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராஜஸ்தான்: துபையில் பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த பட்டய கணக்காளரான நீரஜ் உத்வானி, திருமணமொன்றில் பங்கேற்க இந்தியா வந்துள்ளாா். இந்நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்று பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தாா்.

ஜெய்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் மாநில ஆளுநா் ஹரிபாவ் பகடே, முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷேகாவத், மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உ.பி, குஜராத்தில்..: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த உத்தர பிரதேசம், குஜராத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில முதல்வா்கள் யோகி ஆதித்யநாத், பூபேந்திர படேல் நேரில் ஆறுதல் தெரிவித்தனா்.

============00000==0=0=0=0=====

கா்நாடகம்: பஹல்காம் தாக்குதலில் கா்நாடகத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் ராவ், பரத் பூஷண் ஆகிய இருவா் உயிரிழந்தனா். இவா்கள் இருவரும் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனா்.

சிவமொக்காவில் மஞ்சுநாத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெங்களூரில் பாரத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மாநில முதல்வா் சித்தராமையா, அமைச்சா்கள் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனா்.

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வ... மேலும் பார்க்க

கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதி... மேலும் பார்க்க