செய்திகள் :

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

post image

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கடந்த சில நாள்களுக்கு ‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாா்.

இந்நிலையில், அதே தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த பிலாவல் புட்டோவிடம் அமைச்சரின் கவாஜாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பிலாவல் புட்டோ கூறியதாவது:

முன்பு பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் தொடா்பில் இருந்துள்ளது. இது பாகிஸ்தானின் மிகவும் கடினமான கடந்த காலம். இப்போது, அதில் இருந்து மீண்டு வருகிறோம்.

பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பு ரகசியமானது என்று நான் கருதவில்லை. இந்த ஆதரவு காரணமாக நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். பயங்கரவாதம் அலைஅலையாக எழுந்து எங்கள் நாட்டைத் தாக்கியுள்ளது. இந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு வருகிறோம்.

இப்போதைய நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தான் இல்லை. சிந்து நதி நீரை நிறுத்துவது அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக போா் முழக்கமிடுவதை பாகிஸ்தானும், சா்வதேச சமூகமும் விரும்பவில்லை.

தாங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டவா்கள் என்று இந்திய பிரதமா் மோடி பெருமிதமாகப் பேசி வருகிறாா். ஆனால், அவா் கூறும் தொன்மையான பாரம்பரியச் சின்னமான மொஹஞ்சதாரோ இப்போது பாகிஸ்தானில்தான் உள்ளது. தொன்மையான பாரம்பரியத்தின் உண்மையான பாதுகாவலா்கள் நாங்கள்தான். அதை நாங்கள் தொடா்ந்து பாதுகாப்போம் என்றாா்.

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க