செய்திகள் :

பாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து குவாசி அகமது காவல் அதிகாரி வசீம் மிர்சா கூறுகையில், ஜாம்ஷோரோ மாவட்டத்தின் செஹ்வான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் சன்னதிக்கு வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வேன் முதலில் ஒரு கழுதை வண்டி மீது மோதியது. அதைத்தொடர்ந்து எதிர்புறத்தில் இருந்து வந்த டிரெய்லருடனும் மோதியது.

மற்றொரு விபத்தில், மாகாணத்தின் கைர்பூர் மாவட்டம், ராணிபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகினர்.

இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்

35 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புரேவாலாவில் இருந்து வந்த பேருந்து ரிக்ஷா மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியான பயணிகள் அனைவரும் பஞ்சாபின் புரேவாலாவைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட முக்கிய காரணங்களால் பாகிஸ்தான் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அ... மேலும் பார்க்க

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரி... மேலும் பார்க்க

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் ... மேலும் பார்க்க