செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

post image

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து பாகிஸ்தான் கொடியுடன் எந்தக் கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பும் வெளியானது.

இன்று ஒரே நாளில் அடுத்தடுத்துத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது உத்தரவாக இந்த அஞ்சல் போக்குவரத்துக்கான தடை உத்தரவு வந்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசின் அஞ்சல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு இன்று ஒரே நாளில் தொடர்ந்து தடை உத்தரவுகளாகப் பிறப்பித்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் எல்லையில் தெலங்கானாவில் உள்ள கர்ரேகுட்டா மலைகளில் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 26 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ... மேலும் பார்க்க

வெற்றிபெறுவதற்காக பயிற்சி.. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவத்தின் பதிவு

ஏப்ரல் 22ஆம் தேதி நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு முன்பு, இந்திய ராணுவம் எக்ஸ் பக்க... மேலும் பார்க்க

மே 10 வரை விமான சேவை ரத்து!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வ... மேலும் பார்க்க

மாநில முதல்வர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் கொலை!

இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்... மேலும் பார்க்க