செய்திகள் :

'இந்தியா பின்வாங்கினால்...' - ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்

post image

'இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பதிலடி கொடுக்கப்படும்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இப்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "கடந்த இரண்டு வாரங்களாகவே, இந்தியாவிற்கு எதிராக நாங்களாக எந்தத் தாக்குதலையும் தொடங்கமாட்டோம் என்று கூறி வருகிறோம்.

ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் இந்தப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்" என்று பேசியுள்ளார்.

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம்

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பஹல்காமுக்கு சுற்றுலா வந்த 25 பேரும், அவர்களை காப்பாற்ற சென்ற ஒரு உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அதற்கு பதிலடியாகத் தான் 'ஆபரேஷன் சிந்தூர்' -ஐ கையிலெடுத்துள்ளது இந்திய அரசு.

ஆசிப்பின் இந்தப் பதில், பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுக்குமா... அல்லது பின்வாங்குமா? என்கிற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க