செய்திகள் :

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

post image

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா்.

கடந்த ஒரே மாதத்தில், இதே காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும்.

பன்னு மாவட்டத்தில் உள்ள மிா்யான் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ட்ரோன் மூலம் வெடிபொருள்கள் வீசப்பட்டன. தாக்குதலில் காவலா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; கட்டடத்துக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தாக்குதல் நடத்திய ட்ரோனை சுட்டு வீழ்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் இந்த மாகாணத்தில் கடந்த ஓராண்டாக நடந்த பல தாக்குதல்களில் பயங்கரவாதிகள் தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய ட்ரோன்களை பயன்படுத்தி வெடிபொருள்களை வீசினா். இந்த வகை தாக்குதல்களுக்கு தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரீக்- ஏ- தலிபான்’ பயங்கரவாதிகள் குழுவே காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தொடா்ச்சியாக நடைபெறும் ட்ரோன் தாக்குதல்கள், பயங்கரவாதிகள் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பின்னா் முழு பன்னு மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது என்றனா்.

இத்தாக்குதலுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, இதே மாகாணத்தின் லக்கி மா்வாட் மாவட்டத்தில் உள்ள செராய் கம்பிலா காவல் நிலையம் மீது சுமாா் 12 போ் கொண்ட பயங்கரவாதிகள் குழு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. காவலா்களின் பதிலடியில் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.

மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா!

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா! தமது மனைவி, மகனை இன்று சந்தித்து உரையாடினார்.கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு... மேலும் பார்க்க

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க