செய்திகள் :

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

post image

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களுக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் ரஷியா மீது கடுமையானத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைனின் ஏராளமான நகரங்களின் மீது ரஷியா நேற்று (ஜூலை 15) இரவு முதல் இன்று (ஜூலை 16) அதிகாலை வரை கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியா அக்கிரமித்துள்ள கிரிமியா பகுதிகளிலிருந்து, இஸ்காந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும், சுமார் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாகவும் உக்ரைன் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, உக்ரைனின் விமானப் படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி மற்றும் வின்னிடிசியா, கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின், மூலம் தீர்வு எட்டப்படாத சூழலில், உக்ரைன் மீதான தனது கோடைக்காலத் தாக்குதல்களை கடந்த சில வாரங்களாக ரஷியா அதிகரித்துள்ளது.

இதனால், உக்ரைனுக்கு அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க, நாட்டோ அமைப்பின் தலைவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வதாக, அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 14 ஆம் தேதி கூறியிருந்தார்.

இத்துடன், 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

Russia reportedly launched hundreds of drones, missiles, and artillery attacks on Ukraine overnight.

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க