செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலால் தடைபடும் மும்பை அணியின் பயணம் - IPL சேர்மன் சொல்வதென்ன?

post image

IPL 2025 தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால், தாக்குதலுக்கு உள்படும் அபாயம் உள்ள தரம்ஷாலா மைதானத்தில் போட்டிகள் நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஐபிஎல் தலைவர் தலைவர் அருண் துமால்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லைப்புற மாநிலங்கள் போர் அபாயத்தில் சிக்கியுள்ளன.

PBKS Captain Shreyas Iyer
PBKS Captain Shreyas Iyer

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. அவற்றில் தரம்ஷாலா விமான நிலையமும் அடக்கம்.

பஞ்சாம் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான தரம்ஷாலாவில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியும், வரும் 11-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியும் நடைபெறவுள்ளது.

அருண் துமால், தற்போதைக்கு திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரத்தில் போட்டிகள் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். "மே 11 மும்பை - பஞ்சாப் இடையிலான போட்டி வெகு தொலைவில் இருக்கிறது. அரசு சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டால், மாற்று இடங்கள் குறித்து முடிவு செய்வோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

IPL 2025
IPL 2025

மே 11 நடைபெறும் போட்டிக்காக இன்று தரம்ஷாலா செல்லவிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ-யிடமிருந்து மறு அறிவிப்பாக மும்பை அணி நிர்வாகம் காத்திருக்கிறது.

அருண் துமால்,"போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக மும்பை அணி இன்று பயணிக்கவில்லை. அவர்களை கூட்டி வருவதற்காக மாற்று ஏற்பாடுகளை சிந்தித்து வருகிறோம். இங்கு வருவது மட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் ஹோம் கிரவுண்டுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அரசு தரப்பில் ஆலோசனைகள் எதுவும் வரவில்லை என்பதனால், போட்டியில் மாற்றங்கள் எதுவும் இல்லை." எனக் கூறியுள்ளார்.

அரசு அறிவிப்பின் படி, வட இந்தியாவில் அமிர்தசரஸ், பிகானர், சண்டிகர், தர்மஷாலா, குவாலியர், ஜம்மு, ஜோத்பூர், கிஷன்கர், லே, ராஜ்கோட் மற்றும் ஸ்ரீநகர் உள்பட பல விமான நிலையங்கள் மே 10 வரை மூடப்பட்டுள்ளன.

``போரை தேர்வு செய்தது பாகிஸ்தான்; ஆனால்..'' முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்; பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் vs டெல்லி போட்டி ரத்து!

தர்மசாலாவில் பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக சுமார் 8:30 மணியளவில் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்று பெட்டிங்கைத் டெஹ்ரவு செய்த பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்... மேலும் பார்க்க

Rohit: "அடுத்த இலக்கு இதுதான்" - டெஸ்ட் ஓய்வுக்குப் பின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார் ரோஹித்?

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022-ல் மூன்று ஃபார்மட் அணிக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.அதன்பிறகு,... மேலும் பார்க்க

KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?

'சென்னை வெற்றி!'சீசனின் க்ளைமாக்ஸில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த சென்னை அணி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் கொல்க... மேலும் பார்க்க

Dhoni : 'கொல்கத்தாவும் என்னோட சொந்த ஊர்தான்!' - ஈடன் கார்டனில் நெகிழ்ந்த தோனி

'கொல்கத்தா vs சென்னை!'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றார். மு... மேலும் பார்க்க

Operation Sindhoor: 'ஒற்றுமையில் அச்சமற்றவர்கள்' - கிரிக்கெட் பிரபலங்களின் பதிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம்... மேலும் பார்க்க