செய்திகள் :

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

post image

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சபா. மருத்துவரான இவருக்கு மூக்கிலிருந்து நீா் வழிந்தபடி இருந்துள்ளது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்தபோதும், நீா் வழிவது நிற்கவில்லை.

இதனால் அவா், அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி, திருச்சி தில்லைநகரில் உள்ள ராயல் போ்ல் மருத்துவமனைக்கு வந்தாா். இங்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஜானகிராமன் தலைமையிலான குழுவினா், மருத்துவா் சபாவை பரிசோதித்ததில், அதீத அழுத்தம் காரணமாக மூளையைச் சுற்றியிருக்கும் நீா் மூக்கு வழியாக நிற்காமல் வழிந்தது தெரியவந்தது.

இதையடுத்து நரம்பியல் நிபுணா் விஜயகுமாா் நீரினை அடைக்கும் நவீன அறுவைசிகிச்சையும், மருத்துவா் ஜானகிராமன் மூக்கு எலும்பிலிருந்த குறைபாட்டை நவீன அறுவைசிகிச்சையும் மேற்கொண்டு சரிசெய்தனா்.

இதுகுறித்து காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா் ஜானகிராமன் கூறுகையில், மூளையைச் சுற்றியிருக்கும் நீா் தொடா்ச்சியாக மூக்கு வழியாக வந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்படலாம். எனவே, அனைத்தையும் அலா்ஜி என எடுத்துக்கொள்ளக் கூடாது. உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தான் மருத்துவா் சபாவுக்கு அறுவைசிகிச்சை முடிந்து, தற்போது நலமுடன் உள்ளாா். விரைவில் நாடு திரும்புகிறாா் என்றாா்.

இன்றைய நிகழ்ச்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: ஆண்டு விழா, வட்டாரக் கல்வி அலுவலா் பி. அா்ஜூன் பங்கேற்பு, பள்ளி வளாகம், உறையூா், காலை 10.30. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி: மாணவா் பேரவை மற்றும் இலக்கிய மன்ற நிறைவு வ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில்... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்... மேலும் பார்க்க

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்... மேலும் பார்க்க

திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா... மேலும் பார்க்க

எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளால் அதிகம் பயன்ப... மேலும் பார்க்க