செய்திகள் :

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!

post image

பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பின்போது, ரசிகர்களுடன் நடிகை சுசித்ரா கண்கலங்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.

பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது, இத்தொடரை இல்லத்தரசிகள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.

இந்தத் தொடரின் கதையின் பிரதான பாத்திரத்தில் நடிகை சுசித்ரா, பாக்கியலட்சுயாக நடித்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் இந்தத் தொடரின் வெற்றிக்கு வலுசேர்த்து வருகிறார்.

இத்தொடர் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பாகவுள்ளன.

இந்த நிலையில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் பேசினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில், ”பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ள தகவல் உங்களுக்கு தெரியும், இந்தத் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம்.

நீங்கள் வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொடரின் ஒளிபரப்புக்கு ஆதரவாக இருந்த சேனல் நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி.

அடுத்தத்தடுத்து நான் நடிக்கவுள்ள புதிய தொடர்களுக்கும் உங்களுடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

5 ஆண்டுகளாக பாக்யாவாக வாழ்ந்துவிட்டேன். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. பாக்கியலட்சுமி தொடரின் கடைசி நாள் எபிசோடு எப்போது ஒளிபரப்பாகுமென்று எனக்குத் தெரியாது” என்று கண்ணீருடன் உருக்கமாகப் பேசினார்.

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவ... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க

முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.இதில் கோனெரு ... மேலும் பார்க்க

ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் த... மேலும் பார்க்க

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-... மேலும் பார்க்க